Thursday, July 17, 2014

தினேஷ் நல்லசிவம் கடிதம்

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு ..,
                                                                              நலம் அறிய விருப்பம் சார் .. தங்களின் “பனி மனிதன் ” நூலை இன்று வாசித்து முடித்தேன் ஒரே வீச்சாக  யாராக இருந்தாலும் அப்படிதான்  வாசிக்க முடியும் போல  அவ்வளவு ஒரு  சுவாரசியமான நடை .எளிய கற்பனைகளின் மூலம் நிகழ்வுகளை கோர்த்து கோர்த்து அவ்வளவு கனிவான கதை ஓட்டம்.


கதையின் கரு இதுதான்  ஒரு மூணு பேரு அந்த பனிமனிதன  அப்படி ஒரு மனிதன் இருப்பதை நம்ப முடியாமல் தேடி போகிறார்கள் ஆனால் உங்கள் அந்த   அசத்தலான எளிமையான  நடை  நான்காவதாக என்னையும் கூட்டி கொண்டு போய் விடுகிறது. ஓவொரு அத்தியாயத்திலும் ஏதாவது ஒரு வேகத்தை அதிகபடுதுவது மாதிரி ஒரு அசாதாரண திருப்பம் மேலும் ஒவ்வொரு பக்கத்திலும்  ஒரு முக்கியமான தகவலாவது வந்து கொண்டே இருக்கிறது அதையும் டாக்டர் திவாகர் சொல்றவிதம் , ஒவ்வொன்றுக்கும் கேள்விகளை பாண்டியன் மூலமாக  அதை அவரிடம் தெளிவாக கேட்டு விடுவது.அதிகம் எதுவுமே பேசாமல் வருகின்ற கிம் sungh சில இடங்களும்   வெள்ளந்தியாக அனைத்து நிகழ்வுகளின் மேலும் அவன் கொள்ளும் நம்பிக்கை , அவன் மூலியமாக மட்டுமே பனிமனிதன் அவர்களை பார்க்க அவர்கள் இடத்திற்கு அனுமதிப்பது பின்னால் அனுபவங்களின் மூலம் அவன் மகா லாமாவாக நிலையை அடைவது ஒரு அர்த்தமான பயணம் போல கொண்டு சென்றிருப்பது

,பனி சூழ்ந்த இடத்தின் காட்டை காண்பித்திருப்பது அதற்கு சூழியல் ரீதியான விளக்கம், பனிமனிதன் வாழும் இடத்தின் விந்தையான பிராணிகள் , அதை விவரிக்கும் விதம் ,அவர்களின் தியான முறை ,  ஆழ்மன ரீதியாக செயல்படும் அவர்களின் மனம் ,பாண்டியனின்   வவ்வால் பயணத்தை தற்போது வந்த அவதார் படத்துடன்  கற்பனையாக இணைக்க   அந்த உலகத்தில் அவர்களோடு என்னாலும் ஓரளவு உணர   முடிந்தது.


எவ்வளவோ வரிகள் படிக்கும் போது ரீபிட் ஆகி விடுகிறது.பனி மனிதன் மற்றும் அவர்கள் சார்ந்த உலகத்தை பார்த்து விட்டு வந்தவுடன் திரும்பி செல்லும் போது லாமாவுடன் வரும் இடங்கள் பாண்டியனும் திவாகரும் இறுதி அத்தியாங்கள் “மனிதன் கருணையானவன் அனால் மனித இனத்திற்கு கருணை கிடையாது “,”இந்த பூமியின் எதிர்காலத்தை விட கடமை பெரிதா ” என திவாகர் பாண்டியனிடம் கோபப்படும் இடங்கள் , நாவலினின் இறுதியில்  திரும்பி செல்ல அவர்களுக்கு  வழிகாட்டியாக பனிமனிதன் விட்டு செல்லும் காலடி தடம் ஆஹாஅந்த கணத்தில் நான் ரொம்ப நெகிழ்ந்து விட்டேன்  இதுதான்யா நம்ம ஜெயமோகன் என்று சொல்லி கொண்ட ஈரமாக முடித்தேன்.எத்தனை தடவை மறு வாசிப்பு செய்வேன் என்று தெரியவில்லை .   ரொம்ப உள்ள இறங்கி வாசிக்க வைத்து விட்டீர்கள் ரொம்ப  நன்றி சார்

.  படிக்கும் பழக்கம் இல்லாத நண்பர்களுக்கும் கூட   ப்ரெசென்ட் செய்ய ஒரு அருமையான கிப்ட் இந்த புத்தகம்.

திரு ஜெயமோகன் அவர்களுக்கு என்னுடைய எதிர்வினையாக நீங்கள் recommand செய்த தேவதேவன் இன்  மார்கழி தொகுப்பில்  எழுதிய ஒரு கவிதை யை சொல்ல தோன்றுகிறது
எந்த வைரத்திற்கு
குறைந்தது, என் அன்பே
இதோ
நம் இல்லத்தின்
இந்த ஜன்னல் கண்ணாடியில்
ஒளிரும் சூர்ய ஒளி
அது போல  எளிமையான நெகிழ்வான இந்த படைப்பு உங்களின் எந்த படைப்பு குறைந்து சார் ..?.சிறுவர்கள்  மட்டும்  படிக்கும் நாவல் என்று ஒதுக்கி வைத்தால் இழப்பு எனக்கு தான் .
—-
Regards
dineshnallasivam

அன்புள்ள தினேஷ்

பனிமனிதன் சிறுவர்களுக்கான மொழிநடையில் எழுதப்பட்டது. ஒருதளம் சிறுவர்களுக்கும் புரியக்கூடியது.  ஆனால் எந்த எழுத்தாளனும் கதையை முதலில் தனக்காகவே எழுதிக்கொள்கிறான். அவனுடைய மனம் அதில் ஈடுபடாவிட்டால் அவனால் எழுதமுடியாது. என்னுடைய அகம் எந்த சிக்கல்களில் புழங்குகிறதோ அதைத்தான் நான் எதிலும் எழுத முடியும். அதுவேதான் பனிமனிதனிலும் உள்ளது. பனிமனிதன் சிறுவர்களுக்கான ஓர்  சாகச-ஆன்மீக நாவல் என்று சொல்வேன்
ஜெ


1 comment:

  1. Borgata Hotel Casino & Spa - Mapyro
    Borgata Hotel Casino & Spa locations, 제천 출장안마 rates, amenities: expert Atlantic City 전주 출장마사지 research, 과천 출장샵 only at Hotel and Travel Index. Borgata 의왕 출장마사지 Hotel Casino 경주 출장마사지 & Spa.

    ReplyDelete